search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    கோவையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பதவி விலக கோரி தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கோவை:

    குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பதவி விலக கோரி கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொது செயலாளர் வி.பி. துரைசாமி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது-

    குட்கா ஊழலை பொறுத்தவரை வருமான வரித்துறையினர் மாதவராவ் வீட்டில் சோதனை நடத்தி டைரியை கைப்பற்றி மாதவராவை கைது செய்துள்ளனர்.

    லஞ்சம் கொடுத்த மாதவராவை கைது செய்துள்ள போது லஞ்சம் வாங்கிய அமைச்சரை கைது செய்யாதது ஏன்?

    இந்த அரசு பாதுகாப்பற்ற அரசாக உள்ளது. இந்த ஆட்சியில் தொழில் முடங்கி விட்டது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை உழைக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தல், சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிக்காக பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, மெட்டல் மணி, நந்த குமார், குமரேசன், குப்புசாமி, உமா மகேஸ்வரி, இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், துணை அமைப்பாளர் திருமலை ராஜா, தளபதி இளங்கோ, வக்கீல்கள் கணேஷ் குமார், அருண் மொழி, தண்டபாணி, இளைஞரணி மணிகண்டன், தனபால், மாணவரணி வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் மாரிச் செல்வம், பீளமேடு பி.டி. முருகேசன், கோவை லோகு, தினேஷ், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னாள் மேயர் வெங்கடாசலம், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர். மோகன் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு. ராமகிருஷ்ணன், கொ.ம.தே.க. வடிவேல், தனபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி இலக்கியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    துடியலூர் பஸ் நிலையம் முன் கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். விவசாய அணி அமைப்பாளர் பையா கவுண்டர், பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் அறிவரசு, டி.பி. சுப்பிரமணியம், பத்மாலயா சீனிவாசன், கணேஷ் ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளூவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×