search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்- போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை
    X

    விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்- போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை யொருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர்.

    இதில் 2 பேர் படுகாயம் அடைந்து பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் தென்கரை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    Next Story
    ×