search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் வெவ்வேறு விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலி
    X

    கோவையில் வெவ்வேறு விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலி

    கோவையில் சாலையில் நடந்து சென்ற விவசாயி மீது கார் மோதியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 70). விவசாயி.

    சம்பவத்தன்று இவர் ஆனைமலை- வேட்டைக்காரன்புதூர் ரோட்டில் நடந்து சென்றார். ஓடையாகுளம் சந்திப்பு அருகே சென்றபோது எதிரில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து காளிமுத்து மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் காளிமுத்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காடம்பாறை மின்சார வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பாபு (35). டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வால்பாறை- பொள்ளாச்சி ரோட்டில் சென்றார். சண்முகாபுரம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாபு ரத்த வெள்ளத்தில் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×