search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் போராட்டம் - பெண் கஞ்சா வியாபாரி குடும்பத்துடன் தலைமறைவு
    X

    பொதுமக்கள் போராட்டம் - பெண் கஞ்சா வியாபாரி குடும்பத்துடன் தலைமறைவு

    திருப்பூரில் கஞ்சா விற்பனை தொழில் செய்துவந்த பெண் வியாபாரி, பெண்கள் போராட்டம் நடத்துவதை அறிந்து தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் தலைமறைவாகிவிட்டார்.

    திருப்பூர், செப்.18-

    பொதுமக்கள் போராட்டம் காரணமாக பெண் கஞ்சா வியாபாரி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

    திருப்பூர் குமாரசாமி நகர் பகுதியை சேர்ந்த பாபு மற்றும் அவரது மனைவி சுப்புலட்சுமி ஆகியோர் பல ஆண்டுகளாக வீட்டில் வைத்தே கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்புலட்சுமியை பல முறை கைது செய்துள்ளனர். ஆனால் மீண்டும் கஞ்சா விற்பனை செய்வதை அவர் முழு நேர தொழிலாக செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து பிச்சம் பாளையம் புதூர் நால் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த அனுப்பர் பாளையம் போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது பெண்கள் சிலர் கஞ்சா வியாபாரி சுப்புலட்சுமி வீட்டிற்கு சென் று முற்றுகையிட்டனர்.

    மேலும் சுப்புலட்சுமியின் வீட்டின் இரு பக்க கதவுகளில் சங்கிலியுடன் கூடிய பூட்டை போட்டு பூட்டினார்கள்.

    பெண்கள் போராட்டம் நடத்துவதை அறிந்த கஞ்சா வியாபாரி சுப்புலட்சுமி தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் தலை மறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×