search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் மலைச்சாலையில் வாலிபர் படுகொலை
    X

    கொடைக்கானல் மலைச்சாலையில் வாலிபர் படுகொலை

    கொடைக்கானல் மலைச்சாலையில் வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தேவதானப்பட்டி:

    கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் டம்டம்பாறை அருகே சாலையோரம் ஆண்பிணம் கிடப்பதாக தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் சுகுமாறன், சப்-இன்ஸ்பெக்டர் சாகுல் தலைமையில் உளவுத்துறை வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்த வாலிபருக்கு சுமார் 35 வயது இருக்கும். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் முகம் வெந்து காணப்பட்டது.

    இவரை மர்மகும்பல் கடத்திவந்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்தவாலிபர் கொலை செய்யப்பட்டு 2 நாட்களுக்கு மேலானதால் அவருடைய முகம் அழுகிய நிலையில் உள்ளது. குடிபோதையில் நண்பர்கள் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையில் கொலை நடந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×