என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை அருகே பள்ளி ஆசிரியரிடம் கத்திமுனையில் செல்போன் பறித்த வாலிபர்கள்
தேனி:
மதுரை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது38). இவர் வத்தலக்குண்டு அருகில் உள்ள விருவீடு செக்காபட்டி அரசு பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கெங்குவார்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றார். மீண்டும் பரசுராமபுரம் பகுதியில் திரும்பிக்கொண்டிருந்த போது 4 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர். பின்னர் கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டினர். அவரிடம் பணம் இல்லாததால் மணிகண்டன் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் செல்போனை பறித்து சென்றது கெங்குவார் பட்டியை சேர்ந்த பிரேம்குமார் (18), முத்துக்குமார் (18), வெங்கடேஷ் (20), சங்கர் (23) என தெரிய வந்தது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்