search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே பள்ளி ஆசிரியரிடம் கத்திமுனையில் செல்போன் பறித்த வாலிபர்கள்
    X

    மதுரை அருகே பள்ளி ஆசிரியரிடம் கத்திமுனையில் செல்போன் பறித்த வாலிபர்கள்

    பள்ளி ஆசிரியரிடம் கத்தி முனையில் செல்போன் பறித்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    மதுரை மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது38). இவர் வத்தலக்குண்டு அருகில் உள்ள விருவீடு செக்காபட்டி அரசு பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கெங்குவார்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றார். மீண்டும் பரசுராமபுரம் பகுதியில் திரும்பிக்கொண்டிருந்த போது 4 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர். பின்னர் கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டினர். அவரிடம் பணம் இல்லாததால் மணிகண்டன் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் செல்போனை பறித்து சென்றது கெங்குவார் பட்டியை சேர்ந்த பிரேம்குமார் (18), முத்துக்குமார் (18), வெங்கடேஷ் (20), சங்கர் (23) என தெரிய வந்தது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×