search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தியாகதுருகம் அருகே இருதரப்பினர் மோதல் - 4 பேர் கைது
    X

    தியாகதுருகம் அருகே இருதரப்பினர் மோதல் - 4 பேர் கைது

    தியாகதுருகம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே உள்ள சித்தலூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரன்(வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்(46) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்றும் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகார்களின் பேரில் இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவிந்தராஜ் மற்றும் மணிகண்டன்(22), அருண்பாண்டியன்(21), கோவிந்தன்(28) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×