என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலி
Byமாலை மலர்18 Sep 2018 4:58 AM GMT (Updated: 18 Sep 2018 4:58 AM GMT)
ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
தருமபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரிய கொட்டக்குளம் பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன். இவர் அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், ஆனந்தூர் முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவருமாக இருந்து வந்தார்.
நேற்று மாலை வேடியப்பன் தனது மோட்டார் சைக்கிளில் ஊத்தங்கரை சென்று கொண்டிருந்தார். அப்போது நொச்சம்பட்டி வளைவு பகுதியில் செல்லும் போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வேடியப்பன் மீது மோதியது.
இதில் தூக்கி விசப்பட்ட வேடியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற அவரை பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லும் போது வேடியப்பன் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X