search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சியில் கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி- டிரைவர் கைது
    X

    பொள்ளாச்சியில் கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி- டிரைவர் கைது

    பொள்ளாச்சியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி சேரன் காலனியை சேர்ந்தவர் செந்தில் முருகன் (53). இவர் நெகமம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சேரன் நகரில் உள்ள வளைவில் திரும்பிய போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தூக்கி வீசப்பட்டார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி செந்தில் முருகன் இறந்தார். இது குறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×