என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஏன்? - ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம்
Byமாலை மலர்17 Sep 2018 12:13 PM GMT (Updated: 17 Sep 2018 12:13 PM GMT)
நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய பாஜக தலைவர் எச்.ராஜா மீது தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது ஏன்? என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சி.டி. செல்வம், நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளனர். #HRaja #MadrasHC
சென்னை:
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசாருடன் ஏற்பட்ட தகராற்றில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா, சென்னை ஐகோர்ட்டையும், காவல்துறையும் குறித்து கீழ்தரமாக விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் மீது 8 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ் அமர்வில் சில வழக்கறிஞர்கள் எச்.ராஜா குறித்து முறையிட்டனர். ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் தாமாக முன்வந்து விசாரிக்க தேவையில்லை என நீதிபதிகள் மறுத்தனர்.
இதனை அடுத்து, நீதிபதிகள் சி.டி. செல்வம், நிர்மல் குமார் அமர்வு இவ்விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. எச்.ராஜா அக்டோபர் 22-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கருத்து கூறுகையில்,
நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்துவதை அனுமத்தால் பாசிசம், நக்சலிசம் வளர்ந்து விடும். நீதித்துறையின் கண்ணியத்தை காப்பது நீதிபதிகளின் தலையாய கடமை. அரசும் காவல்துறையும் போகிற போக்கில் இதனை மறப்போம், மன்னிப்போம் என மறந்து விடுவார்கள்.
என தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X