search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

    தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத்தலைவர் ராஜன் தலைமையில் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காய்கனி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு கீதாஜீவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில், பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அழகிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்புள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் உருவ படத்துக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விளாத்திகுளம் அருகே அருங்குளத்தில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×