search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லீஸ் நகர்-பைபாஸ் சாலை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
    X

    எல்லீஸ் நகர்-பைபாஸ் சாலை பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    மதுரை எல்லீஸ் நகர் மற்றும் பைபாஸ் சாலை பகுதியில் நாளை (திங்கட் கிழமை) மின்சப்ளை நிறுத்தப்படுகிறது.

    மதுரை:

    மதுரை எல்லீஸ் நகர் மற்றும் பைபாஸ் சாலை பகுதியில் நாளை (திங்கட் கிழமை) மின்சப்ளை நிறுத்தப்படுகிறது.

    இதுகுறித்து மதுரை மின் வினியோக செயற் பொறியாளர் சுஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை எல்லீஸ் நகர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் மாப்பாளையம், அன்சாரி நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, தாகூர் நகர், எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலைய பகுதி, எல்லீஸ் நகர் முழுவதும், அரசரடி, டி.பி.ரோடு, கென்னட் ஆஸ்பத்திரி ரோடு, மேல வாசல் பகுதிகள், பெரியார் பஸ் நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆர்.எம்.எஸ். ரோடு, ரெயில்வே ஜங்சன், மேலமாசிவீதி, நேதாஜி ரோடு, மேலஆவணி மூல வீதி, கமாண்டிங் ஆபீசர் சந்து, மேலப்பாண்டியன் அகிழ் தெரு பகுதிகளில் மின்வினியோகம் தடை படும்.

    இதேபோல் நன்மை தருவார் கோவில் தெரு, சுண்ணாம்புகார தெரு, அரிசிகாரத்தெரு, பூக்காரத் தெரு, வடக்கு கிருஷ்ணன் கோவில் தெரு, சொக்க கொத்தன் தெரு, கோபால கொத்தன் தெரு, தானப்ப முதலி தெரு, வசந்த நகர், அக்கிரினை குடியிருப்பு பகுதி, ராமலிங்க நகர், நீல கண்ட கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, போடி ரெயில்வே லைன், பசும்பொன்நகர், பைபாஸ் ரோடு, கீழ்புரம் மற்றும் மேல்புரம், மீனாட்சி மில் பழைய காலனி, ஏ.ஆர்.தோப்பு, போலீஸ் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×