என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடையாறு அருகே போலீசாரிடம் குடிபோதை அளவிடும் கருவியை பறித்து ஓடிய மாணவர்
Byமாலை மலர்16 Sep 2018 10:41 AM GMT (Updated: 16 Sep 2018 10:41 AM GMT)
அடையாறு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரின் குடிபோதை அளவிடும் கருவியை பறித்து தப்பி சென்ற மாணவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
சென்னை:
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பூஷன். இவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
பூஷன் தன்னுடைய விலை உயர்ந்த சொகுசு காரில் அடையாறு நோக்கி வந்து கொண்டிருந்த போது சத்யா ஸ்டூடியோ அருகே போக்குவரத்து காவலர்கள் காரை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது மாணவர் பூஷன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குடிபோதையை அளவிடும் கருவியை வைத்து சோதனை செய்ய முயன்றபோது மாணவர் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து கருவியை பறித்துக் கொண்டு காரில் தப்பி ஓடிவிட்டார்.
அதிர்ச்சியடைந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக மற்ற போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கே அவர்கள் பூஷனுடைய காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவரிடமிருந்த கருவியை பறிமுதல் செய்து அவரை அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பூஷன். இவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
பூஷன் தன்னுடைய விலை உயர்ந்த சொகுசு காரில் அடையாறு நோக்கி வந்து கொண்டிருந்த போது சத்யா ஸ்டூடியோ அருகே போக்குவரத்து காவலர்கள் காரை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது மாணவர் பூஷன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குடிபோதையை அளவிடும் கருவியை வைத்து சோதனை செய்ய முயன்றபோது மாணவர் போக்குவரத்து போலீசாரிடம் இருந்து கருவியை பறித்துக் கொண்டு காரில் தப்பி ஓடிவிட்டார்.
அதிர்ச்சியடைந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக மற்ற போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கே அவர்கள் பூஷனுடைய காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவரிடமிருந்த கருவியை பறிமுதல் செய்து அவரை அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X