என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது - முதல்வர் பழனிசாமி
Byமாலை மலர்16 Sep 2018 9:56 AM GMT (Updated: 16 Sep 2018 9:56 AM GMT)
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #edappadipalaniswami
காஞ்சீபுரம்:
அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை 30 மாவட்டங்களில் சிறப்பாக நடத்தி காட்டினோம். மக்கள் கூட்டம் அலைமோதியதை பொறுக்க முடியாத எதிர் கட்சியினர் மக்களிடம் தவறான தகவல்களை பரப்பிகொண்டு வருகிறார்கள்.
வரும் 22-ந்தேதி கன்னியா குமரியிலும், வரும் 30-ந்தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நிறைவு விழா நடக்க இருக்கிறது. அப்போது அ.தி.மு.க.வின் வலுவினை நாட்டுமக்களும், எதிர்கட்சியினரும் அறிந்துகொள்வார்கள்.
கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்யும் அளவிற்கு விஞ்ஞான மூளை படைத்தவர்கள் தி.மு.க.வினர்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்பார் என அக்கட்சியினர் கூறிவரும் நிலையில் அவர் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டவர்களை வீடு வீடாகச் சென்று ஆறுதல் கூறி வருகின்றார்,
தி.மு.க.வினர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பில்லை கொடுக்காமல் அதன் உரிமையாளரையே அடிக்கின்றனர். வேலூரில் ஒரு செல்போன் கடையில் செல்போன் வாங்கிவிட்டு அவரையே அடிக்கின்றனர். ஒரு அழகு நிலையத்தில் தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் உள்ளே சென்று ஒரு பெண்ணை அடித்து உதைக்கிறார். எதிர்கட்சியாக இருக்கும்போதே இந்த நிலை என்றால் ஆளும் கட்சியாக வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. அ.தி.மு.க.வில் மட்டும் தான் நேர்மை, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடந்தது என்று நாட்டு மக்களுக்கு தெரியும். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி என்றால் அது தி.மு.க. ஆட்சிதான். அப்படிப்பட்டவர்கள் நம்மை விமர்சனம் செய்கிறார்கள்.
தி.மு.க.வில் தான் வாரிசு அரசியல் உள்ளது, அ.தி.மு.க. சாமானிய தொண்டர்களுக்கான கட்சி, இங்கு விசுவாசத்துடன் உழைப்பவர்கள் உயர் பதவிக்கு வருவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு அனைத்து தொகுதிகளிலும் அதிக அளவில் வெற்றியை ஏற்படுத்தி தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜா பாத் பா.கணேசன் வெள்ளியிலான விநாயகர் சிலை மற்றும் வெள்ளி வீரவாளினை பரிசாக வழங்கினார். #edappadipalaniswami
அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை 30 மாவட்டங்களில் சிறப்பாக நடத்தி காட்டினோம். மக்கள் கூட்டம் அலைமோதியதை பொறுக்க முடியாத எதிர் கட்சியினர் மக்களிடம் தவறான தகவல்களை பரப்பிகொண்டு வருகிறார்கள்.
வரும் 22-ந்தேதி கன்னியா குமரியிலும், வரும் 30-ந்தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நிறைவு விழா நடக்க இருக்கிறது. அப்போது அ.தி.மு.க.வின் வலுவினை நாட்டுமக்களும், எதிர்கட்சியினரும் அறிந்துகொள்வார்கள்.
கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்யும் அளவிற்கு விஞ்ஞான மூளை படைத்தவர்கள் தி.மு.க.வினர்.
நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா இருக்கும்போது எப்படி வெற்றியை தந்தீர்களோ அதே போல் தொண்டர்கள் தங்கள் முழு திறமையும் பயன்படுத்தி முழு வெற்றியை தரவேண்டும்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்பார் என அக்கட்சியினர் கூறிவரும் நிலையில் அவர் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டவர்களை வீடு வீடாகச் சென்று ஆறுதல் கூறி வருகின்றார்,
தி.மு.க.வினர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பில்லை கொடுக்காமல் அதன் உரிமையாளரையே அடிக்கின்றனர். வேலூரில் ஒரு செல்போன் கடையில் செல்போன் வாங்கிவிட்டு அவரையே அடிக்கின்றனர். ஒரு அழகு நிலையத்தில் தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் உள்ளே சென்று ஒரு பெண்ணை அடித்து உதைக்கிறார். எதிர்கட்சியாக இருக்கும்போதே இந்த நிலை என்றால் ஆளும் கட்சியாக வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. அ.தி.மு.க.வில் மட்டும் தான் நேர்மை, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடந்தது என்று நாட்டு மக்களுக்கு தெரியும். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி என்றால் அது தி.மு.க. ஆட்சிதான். அப்படிப்பட்டவர்கள் நம்மை விமர்சனம் செய்கிறார்கள்.
தி.மு.க.வில் தான் வாரிசு அரசியல் உள்ளது, அ.தி.மு.க. சாமானிய தொண்டர்களுக்கான கட்சி, இங்கு விசுவாசத்துடன் உழைப்பவர்கள் உயர் பதவிக்கு வருவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு அனைத்து தொகுதிகளிலும் அதிக அளவில் வெற்றியை ஏற்படுத்தி தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜா பாத் பா.கணேசன் வெள்ளியிலான விநாயகர் சிலை மற்றும் வெள்ளி வீரவாளினை பரிசாக வழங்கினார். #edappadipalaniswami
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X