என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வியாசர்பாடியில் தொழிலாளி கொலை - வாலிபர் கைது
பெரம்பூர்:
வியாசர்பாடியில் நேற்று இரவு நடந்த தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். அவரது பெயர் மாஸ்க் கிரீன் (வயது 54). வியாசர்பாடி கணேசபுரம் எம்.எம்.கார்டன் 1-வது தெருவில் வசித்து வந்தார்.
இவருடன் அக்கா மகன் எல்லப்பன் (31) மற்றும் குடும்பத்தினர் வசித்து வந்தனர். நேற்று இரவு மாஸ்க் கிரீன் வீட்டுக்கு வந்து பெண்களிடம் தகராறு செய்தார். அப்போது கோபத்தில் வீட்டுக் கூரையை பிரித்துப் போட்டு ரகளை செய்தார்.
இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த எல்லப்பன் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டார். அவரிடமும் மாஸ்க்கிரீன் சண்டைக்குப் போனார்.
இதனால் ஆத்திரம் அடைந்த எல்லப்பன் அங்கிருந்த கட்டையால் மாஸ்க்கிரீன் தலையில் அடித்தார். கட்டையில் இருந்த ஆணி அவரது தலையில் பாய்ந்து ரத்தம் பீறிட்டது. சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் வியாசர்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் விரைந்து சென்று விசாரணை நடத்தி எல்லப்பனை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்