search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் அருகே ரெயில் மோதி கட்டிட மேஸ்திரி பலி
    X

    திருப்பூர் அருகே ரெயில் மோதி கட்டிட மேஸ்திரி பலி

    திருப்பூர் அருகே ரெயில் மோதி கட்டிட மேஸ்திரி பலியானார்.
    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள வஞ்சிபாளையம் பகுதியில் நேற்று காலை ரெயில்வே தண்டவாளம் அருகே ஒரு ஆண்பிணம் கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பலியாகி கிடந்தவர் திருப்பூர் முருகம்பாளையம் அம்மன்நகரை சேர்ந்த ராமசாமி (வயது 53). கட்டிட மேஸ்திரி என்பதும், அவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி பலியானதும் தெரியவந்தது. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×