search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு
    X

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி ஊட்டி, கோத்தகிரியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
    ஊட்டி:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில் மொத்தம் 500 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. ஊட்டி மற்றும் கேத்தியில் இருந்து விசுவ இந்து பரிசத் சார்பில் 54 சிலைகள் இன்றும்(சனிக்கிழமை), இந்து முன்னணி சார்பில் 45 சிலைகள் நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காமராஜர் சாகர் அணையில் கரைக்கப்படுகிறது. இதையொட்டி ஊட்டி சேரிங்கிராசில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் அருகில் இருந்து போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, தம்பிதுரை, ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி உள்பட 300 போலீசார் கலந்து கொண்டனர். கொடி அணிவகுப்பு ஊர்வலமானது கமர்சியல் சாலை வழியாக காபிஹவுஸ் சந்திப்பு, மணிக்கூண்டை கடந்து பஸ் நிலையம் சென்றது. பின்னர் காந்தல் முக்கோண பகுதியில் இருந்து ரோகிணி தியேட்டர் வரை கொடி அணிவகுப்பு நடந்தது.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா கூறும்போது, ஊட்டியில் இருந்து விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய காமராஜர் சாகர் அணைப்பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அசம்பாவித சம்பவம் நடைபெறுமோ? என்று மக்கள் அச்சப்பட தேவையில்லை. உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். இதை உறுதி செய்யும் வகையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அணையில் நீர் மட்டம் உயர்ந்து இருப்பதால், மாலை 6 மணிக்குள் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்து விட வேண்டும் என்று இந்து அமைப்புகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 99 இடங்களிலும், அனுமன் சேனா சார்பில் 75 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. அந்த சிலைகளை நாளை(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) உயிலட்டி நீர்வீழ்ச்சியில் விசர்ஜனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி நேற்று மதியம் 12 மணிக்கு குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கோத்தகிரி டானிங்டன் சந்திப்பில் தொடங் கிய அணிவகுப்பு ஊர்வலம் காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல், பஸ் நிலையம், ராம்சந்த் சதுக்கம் வழியாக போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. அதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×