search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழியில் 31 விநாயகர் சிலைகள் ஊர்வலம் - உப்பனாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன
    X

    சீர்காழியில் 31 விநாயகர் சிலைகள் ஊர்வலம் - உப்பனாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன

    சீர்காழியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 31 விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு உப்பனாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. #VinayagarChathurthi

    சீர்காழி:

    சீர்காழியில் ஆபத்துகாத்த விநாயகர், செல்விநாயகர், இரட்டைவிநாயகர்,வீரசக்கிவிநாயகர்,ருத்ரவிநாயகர், குமரகோவில் விநாயகர், மங்களவிநாயகர் உள்ளிட்ட 37இடங்களில் விநாயகர் சிலைகள் கடந்த 12-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள்,பூஜைகள் செய்யப்பட்டன. இதில் 6 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. மீதமுள்ள சிலைகள் விசர்ஜனம் செய்யும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு ஒவ்வொன்றாக பல வண்ண மலர்கள், மின் அலங்காரத்துடன் புறப்பட்டன.

    முக்கிய வீதிகளின் வழியாக 31 விநாயகர் சிலைகளும் சென்றன. வழிநெடுங்கிலும் பக்தர்கள் விநாயகருக்கு அர்ச்சனைகள் செய்து வழிப்பட்டனர். நிறைவாக சீர்காழி பழைய பேருந்துநிலையம் பகுதியில் அனைத்து விநாயகர் சிலைகளும் ஒன்றினைந்தன. 31விநாயகர் சிலைகளுக்கு ஒரு சேர தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் வாண வேடிக்கையுடன் ஒவ்வொரு விநாயகர் சிலைகளும் மேல மடவிளாகம், கச்சேரிசாலை, தென்பாதி வழியாக சென்று உப்பனாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் பாஜக கோட்டபொறுப்பாளர் தங்க.வரதராஜன், நிர்வாகிகள் செல்வம், குருமூர்த்தி,அருணாச்சலம், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், விஸ்வ இந்து பரிசத் பொறுப்பாளர் செந்தில் குமார், இந்து முன்னணி நிர்வாகி சி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட இந்து அமைப்பு பொறுப்பாளர்கள், விழா குழுவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×