search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் சில்லறை விலையில் பட்டாசு விற்க நிபந்தனை
    X

    திண்டுக்கல் மாவட்டத்தில் சில்லறை விலையில் பட்டாசு விற்க நிபந்தனை

    திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டாசுகளை சில்லறை விலையில் விற்பனை செய்வதற்கு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    பட்டாசுகளை சில்லறை விற்பனை செய்வதற்கான தற்காலிகமாக உரிமம் இணைய வழி மூலமாக விண்ணப்பம் செய்து பெற நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு சட்டமன்றத்தில் நடந்த மானிய கோரிக்கையின் மீது அறிவிக்கப்பட்டது.

    வணிகர்கள் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக இவ்வுரிமங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதாலும், கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரின் அறிவுரைப்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டாசு சில்லறை விற்பனை செய்வதற்கு தற்காலிக உரிமம் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    உரிமம் பெற விரும்பும் வணிகர்கள் வெடிபொருள் சட்ட விதிகள்-2008ல் சொல்லப்பட்டுள்ள விதிகளின்படி தங்களுடைய விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 28-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

    Next Story
    ×