search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    விழுப்புரம் ஒருங்கிணைந்த காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து ஊர்வலம் நடந்தது. #Congress
    விழுப்புரம்:

    விழுப்புரம் பழைய பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. ரங்கநாதன் வீதி, திருச்சி சாலை வழியாக சென்ற இப்பேரணி கலெக்டர் அலுவலகம் முன்பு முடிவடைந்தது. அங்கு மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்பாட்டம் செய்தனர்.

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சிரஞ்சீவி பேரணியை தொடங்கி வைத்து பேசினார். மத்திய மாவட்டத்தலைவர் சீனுவாசக்குமார், வடக்கு மாவட்டத்தலைவர் ரமேஷ், தெற்கு மாவட்டத்தலைவர் ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகானந்தம், சிவராமன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன்மெளலானா, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெமிமேகர், முன்னாள் மாவட்ட தலைவர் ஆறுமுகம் வட்டார தலைவர்கள் சுரேஷ், கோவிந்தன், காத்தவராயன், சரவணன், மரக்காணம் வட்டாரத் தலைவர் கார்த்திக் பெருமாள் பழனி மாநில பொதுக்குழு உறுப்பினர் இல. கண்ணன், தினகர், சேவாதளம் சசிகுமார், சிறுபான்மை துறை முகமது இம்ரன், இளைஞர் காங்கிரஸ் விக்னேஷ், விவசாய அணி சங்கர், அர்ச்சுனன், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் தயானந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, சுரேஷ்ராம், நகரத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார், சேகர், நாராயணசாமி, குப்பன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் விஸ்வநாதன், ராஜேஷ், புருஷோத்தமன், நடராஜன், மகிளாக காங்கிரஸ் தலைவி மகேஸ்வரி, இளைஞர் காங்கிரஸ் ஸ்ரீராம், மாநில சிறுபான்மைப்பிரிவு துணைத்தலைவர் வாசீம்ராஜா, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜமாணிக்கம், பிரபாகரன், ராமகிருஷ்ணன், குமரேசன், ரமணன், வேலு, செந்தில், வட்டார தலைவர்கள் அன்பு, ராதா, சேட்டு, காமராஜ், காசிநாதன், ஏழுமல, திருக்கோயிலூர் கதிர்வேல், அரிகிருஷ்ணன், அண்ணாமலை, சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக கலெக்டர் சுப்ரமணியத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர். #tamilnews
    Next Story
    ×