என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் விடிய-விடிய மழை
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு மேக மூட்டமாக காணப்பட்டது. பின்னர் ஒரு சில இடங்களில் லேசான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்தது.
நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஈரோடு மற்றும் அதன் வட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய பெய்தது. மழை காற்று வீசாமல் மிதமான நிலையில் பெய்து கொண்டே இருந்தது.
இன்று அதிகாலை நேரத்தில் மழையின் வேகம் குறைந்தது. இன்று காலை 7 மணி வரை தூரல் மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு மின்சாரம் சரி செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தி, பெருந்துறை, பவானி, நம்பியூர் உள்பட பல்வேறு இடங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
பவானிசாகர்- 87 மி.மீ.
கொடிவேரி-42.2 மி.மீ.
குண்டேரிபள்ளம்-38 மி.மீ.
பவானி-20.6 மி.மீ.
சத்தி-20 மி.மீ.
கோபி-14 மி.மீ.
ஈரோடு- 14 மி.மீ.
பெருந்துறை-11 மி.மீ.
அம்மாபேட்டை-11 மி.மீ.
மொடக்குறிச்சி-11 மி.மீ.
வரட்டுப்பள்ளம்-8.8 மி.மீ.
கவுந்தப்பாடி-4 மி.மீ.
நம்பியூர்-2.1 மி.மீ.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தாலும் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அதிக அளவு பெய்யவில்லை. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
நீர் மட்டமும் குறைந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 100.70 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 427 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 650 கன அடியும், வாய்க்காலுக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்