search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நுண்ணீர் பாசன பராமரிப்பு: வெளிமாநில விவசாயிகள் பங்கேற்பு
    X

    நுண்ணீர் பாசன பராமரிப்பு: வெளிமாநில விவசாயிகள் பங்கேற்பு

    நரிக்குடி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையில் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ், நுண்ணீர் பாசன பராமரிப்பு முறைகள் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது.

    பாலையம்பட்டி:

    நரிக்குடி மற்றும் ராஜபாளையம் வட்டாரத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வெளி மாநில விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மண்ணில்லாமல் தென்னை நார் கழிவினை மக்கவைத்து, சொட்டு நீர், தெளிப்பு நீர், மழைதூவுவான் முறையில் நீர்ப்பாசனம் செய்து ஜி-9 திசுவாழை மற்றும் காய்கறிபயிர்கள் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வளர்க்கும் முறை விவரிக்கப்பட்டது.

    மேலும் மலைப்பகுதிகளில் பண்ணை குட்டைகள் அமைத்து நெல்லி, மஞ்சள், மா, மாதுளை, ஆரஞ்சு, பழவகைகள்அடர்நடவு முறையில் அமைத்து பராமரிப்பு செய்யப்பட்டு வருவதை நரிக்குடி, ராஜபாளையம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் வெளி மாநிலமான மராட்டியத்துக்கு பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.

    Next Story
    ×