search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் சாலை அமைக்கக்கோரி கம்யூ.கட்சியினர் மறியல்
    X

    மதுரையில் சாலை அமைக்கக்கோரி கம்யூ.கட்சியினர் மறியல்

    மதுரையில் சாலை அமைக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செல்லூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
    மதுரை:

    மதுரையில் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ற வகையில் சாலை வசதிகள் இல்லாததால், அவதியடைந்து வருகின்றனர்.

    மழை காலங்களில் மேலும் சாலைகள் சேதமடைந்து தண்ணீர் தேக்கும் குளங்களாக மாறி விடுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

    மதுரை காளவாசல், செல்லூர், பழங்காநத்தம், பெரியார், காமராஜர் சாலை, தவிட்டு சந்தை, வில்லாபுரம், அவனியாபுரம், அண்ணாநகர், கே.கே.நகர் உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலுமே சாலைகள் மோசமாக உள்ளன.

    செல்லூர் மார்க்கெட், அகிம்சாபுரம் மெயின் ரோடு, ஜான்சிராணிபுரம் ஆகிய பகுதிகளில் சாலைகள் போடுவதற்காக 2 மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் குவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வரை சாலைகள் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் ஜல்லி கற்கள் ரோட்டில் சிதறி கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் நடக்க முடியாமல் அவதியடைகின்றனர். சாலை மேலும் சேதமடைந்து காணப்படுகின்றன.

    இதை கண்டித்தும் சாலை அமைக்ககோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செல்லூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    Next Story
    ×