என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் சாலை அமைக்கக்கோரி கம்யூ.கட்சியினர் மறியல்
Byமாலை மலர்15 Sep 2018 10:03 AM GMT (Updated: 15 Sep 2018 10:03 AM GMT)
மதுரையில் சாலை அமைக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செல்லூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை:
மதுரையில் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ற வகையில் சாலை வசதிகள் இல்லாததால், அவதியடைந்து வருகின்றனர்.
மழை காலங்களில் மேலும் சாலைகள் சேதமடைந்து தண்ணீர் தேக்கும் குளங்களாக மாறி விடுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
மதுரை காளவாசல், செல்லூர், பழங்காநத்தம், பெரியார், காமராஜர் சாலை, தவிட்டு சந்தை, வில்லாபுரம், அவனியாபுரம், அண்ணாநகர், கே.கே.நகர் உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலுமே சாலைகள் மோசமாக உள்ளன.
செல்லூர் மார்க்கெட், அகிம்சாபுரம் மெயின் ரோடு, ஜான்சிராணிபுரம் ஆகிய பகுதிகளில் சாலைகள் போடுவதற்காக 2 மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் குவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வரை சாலைகள் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் ஜல்லி கற்கள் ரோட்டில் சிதறி கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் நடக்க முடியாமல் அவதியடைகின்றனர். சாலை மேலும் சேதமடைந்து காணப்படுகின்றன.
இதை கண்டித்தும் சாலை அமைக்ககோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செல்லூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
மதுரையில் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ற வகையில் சாலை வசதிகள் இல்லாததால், அவதியடைந்து வருகின்றனர்.
மழை காலங்களில் மேலும் சாலைகள் சேதமடைந்து தண்ணீர் தேக்கும் குளங்களாக மாறி விடுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
மதுரை காளவாசல், செல்லூர், பழங்காநத்தம், பெரியார், காமராஜர் சாலை, தவிட்டு சந்தை, வில்லாபுரம், அவனியாபுரம், அண்ணாநகர், கே.கே.நகர் உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலுமே சாலைகள் மோசமாக உள்ளன.
செல்லூர் மார்க்கெட், அகிம்சாபுரம் மெயின் ரோடு, ஜான்சிராணிபுரம் ஆகிய பகுதிகளில் சாலைகள் போடுவதற்காக 2 மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் குவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வரை சாலைகள் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் ஜல்லி கற்கள் ரோட்டில் சிதறி கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் நடக்க முடியாமல் அவதியடைகின்றனர். சாலை மேலும் சேதமடைந்து காணப்படுகின்றன.
இதை கண்டித்தும் சாலை அமைக்ககோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செல்லூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X