என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அவனியாபுரத்தில் பர்னிச்சர் கடையில் திருட்டு
அவனியாபுரம்:
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ரகு, அவனியாபுரம் காமராஜர் நகரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இன்று காலை கடைக்கு வந்தபோது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 9 துளைபோடும் எந்திரங்கள், ஒரு மோட்டார், கம்ப்யூட்டர், 3 குத்துவிளக்குகள், சரக்கு ஆட்டோ பேட்டரி, பித்தளை குடம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அவனியாபுரத்தில் உள்ள மாநகராட்சியின் வரி வசூல் மையத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து இன்வெர்ட்டர் பேட்டரி உள்பட சில பொருட்களை திருடியுள்ளனர்.
இது போன்று அவனியாபுரத்தில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருவது தொடர் கதையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இதனை தவிர்க்க போலீசார் தீவிர கவனம் செலுத்தி திருடர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்