search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவனியாபுரத்தில் பர்னிச்சர் கடையில் திருட்டு
    X

    அவனியாபுரத்தில் பர்னிச்சர் கடையில் திருட்டு

    அவனியாபுரத்தில் கதவு பூட்டை உடைத்து பர்னிச்சர் கடையில் பொருட்களை மர்ம மனிதர்கள் திருடிச் சென்றனர்.

    அவனியாபுரம்:

    மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ரகு, அவனியாபுரம் காமராஜர் நகரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இன்று காலை கடைக்கு வந்தபோது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 9 துளைபோடும் எந்திரங்கள், ஒரு மோட்டார், கம்ப்யூட்டர், 3 குத்துவிளக்குகள், சரக்கு ஆட்டோ பேட்டரி, பித்தளை குடம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவனியாபுரத்தில் உள்ள மாநகராட்சியின் வரி வசூல் மையத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து இன்வெர்ட்டர் பேட்டரி உள்பட சில பொருட்களை திருடியுள்ளனர்.

    இது போன்று அவனியாபுரத்தில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருவது தொடர் கதையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

    இதனை தவிர்க்க போலீசார் தீவிர கவனம் செலுத்தி திருடர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×