search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
    X

    திருமங்கலம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

    திருமங்கலம் அருகே திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் அய்யனார் (வயது 26). விழாக்களுக்கு ரேடியோ செட் போடும் தொழிலாளி.

    இவர் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். அப்போது திருமண ஆசை காட்டி சிறுமியுடன் தனிமையில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அய்யனார் நடவடிக்கையில் சிறுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தன்னை திருமணம் செய்யும்படி சிறுமி கூறினார். ஆனால் அய்யனார் அதற்கு உடன் படவில்லை.

    எனவே டி.கல்லுப்பட்டி போலீசில் சிறுமி புகார் செய்தார். திருமண ஆசை காட்டி, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தற்போது ஏமாற்றுவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் (போக்சோ) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அய்யனாரை கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×