search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரியில், இன்று அதிமுக பொதுக்கூட்டம்- ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
    X

    பொன்னேரியில், இன்று அதிமுக பொதுக்கூட்டம்- ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

    திருவள்ளுர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் பொன்னேரியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
    பொன்னேரி:

    திருவள்ளுர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் பொன்னேரி ஹரிஹரன் பஜாரில், மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.

    கிழக்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின், எம்.பி.க்.கள் வேணுகோபால், வெங்கடேஷ் பாபு, திருத்தணி அரி, எம்.எல்.ஏ.க்கள் நரசிம்மன், விஜயகுமார், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் பரிமேழலகன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பானுபிரசாத், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுத்துரை, சுமித்ராகுமார், சங்கர், செல்வகுமார், 11-வது வார்டு செயலாளர் வெற்றிவேல், ராமலிங்கம், உபயதுல்லா, செந்தில் குமார், சம்பத், சவுகத்அலி சலிம், நாகராஜ் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழகநிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
    Next Story
    ×