என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க.வில் புதிதாக 8 அமைப்பு செயலாளர்கள்
Byமாலை மலர்15 Sep 2018 6:33 AM GMT (Updated: 15 Sep 2018 6:33 AM GMT)
அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அ.தி.மு.க.வில் புதிதாக 8 அமைப்பு செயலாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். #ADMK
சென்னை:
அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளர்களாக முன்னாள் மத்திய மந்திரி என்.செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் எம்.பரஞ்சோதி, ப.மோகன் மற்றும் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., சின்னத்துரை ஆகிய 5 பேர் புதிதாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் மேலும் 3 பேரை அமைப்பு செயலாளர்களாக நியமித்து அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ஏ.பாப்பா சுந்தரம், மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துராமலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சியில் அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குட்கா ஊழல் தொடர்பாக சமீபத்தில்தான் அவரது வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது.
இந்த 3 பேரையும் சேர்த்து அ.தி.மு.க.வில் புதிதாக 8 பேர் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளர்களாக முன்னாள் மத்திய மந்திரி என்.செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் எம்.பரஞ்சோதி, ப.மோகன் மற்றும் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., சின்னத்துரை ஆகிய 5 பேர் புதிதாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் மேலும் 3 பேரை அமைப்பு செயலாளர்களாக நியமித்து அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ஏ.பாப்பா சுந்தரம், மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துராமலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சியில் அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குட்கா ஊழல் தொடர்பாக சமீபத்தில்தான் அவரது வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது.
இந்த 3 பேரையும் சேர்த்து அ.தி.மு.க.வில் புதிதாக 8 பேர் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதே போல அ.தி.மு.க.வின் சட்ட ஆலோசகராக பி.எச்.பாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் காஞ்சி பன்னீர் செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். #ADMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X