search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக நிர்வாகி மகளுக்கு பாலியல் தொல்லை- 3பேர் போக்சோ சட்டத்தில் கைது
    X

    திமுக நிர்வாகி மகளுக்கு பாலியல் தொல்லை- 3பேர் போக்சோ சட்டத்தில் கைது

    திமுக நிர்வாகி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகியின் மகள் சத்யா (வயது 13). அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அத்தியூர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த ராஜவேல் மகன் சக்திவேல் (18), திரிசங்கு மகன் சங்கர் (19), செல்வராசு மகன் பிரதீப் (19) உள்ளிட்ட 4 வாலிபர்கள் சத்யாவை பின் தொடர்ந்து சென்று கேலி கிண்டல் செய்துள்ளனர். மேலும் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற சத்யா, நடந்த சம்பவம் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தார். அதன்பின்னர் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சிறுமியிடம் அத்துமீறிய சக்திவேல், சங்கர், பிரதீப் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் ஒரு வாலிபரை தேடி வருகிறார்.

    கைது செய்யப்பட்டவர்களில் சங்கர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஐ.டி.ஐ. படித்து வருகிறார். பிரதீப் அரியலூர் அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    Next Story
    ×