search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு கட்டும் திட்டத்தில் ரூ.2 கோடி ஊழல்- கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    வீடு கட்டும் திட்டத்தில் ரூ.2 கோடி ஊழல்- கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    பூதலூர் அருகே வீடு கட்டும் திட்டத்தில் ரூ.2 கோடி ஊழல் நடந்தது குறித்து கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள், பெண்கள் என 50 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் பூதலூர் ஒன்றியம் வெண்டையம்பட்டி கிராமத்தில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறை கேடுகள் நடந்தது. இதே போல் தனிநபர் இல்ல கழிவறை, குடிநீர் உள்ளிட்ட திட்டங்களிலும் ஊழல் நடந்தது. சுமார் ரூ.2 கோடி வரை ஊழல் செய்துள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷமிட்டனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலை சந்தித்து புகார் மனு அளித்தனர். #tamilnews
    Next Story
    ×