search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுபணித்துறை கழிவுநீர் கோட்ட அலுவலகத்தை பாரதிய ஜனதாவினர் முற்றுகை
    X

    பொதுபணித்துறை கழிவுநீர் கோட்ட அலுவலகத்தை பாரதிய ஜனதாவினர் முற்றுகை

    புதுவை நகர பா.ஜனதா சார்பில் பொதுப்பணித்துறை கழிவுநீர் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    பாதாள சாக்கடையை வீடுகளுக்கு இணைப்பதற்கு நகராட்சிகள் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொகுதிக்கு தொகுதி தெருவுக்கு தெரு வேறுவிதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

    இது பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து புதுவை நகர பா.ஜனதா சார்பில் பொதுப்பணித்துறை கழிவுநீர் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு புதுவை நகர் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். நகர மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், ரவி அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    மாநில தலைவர் சாமிநாதன், மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் துணை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் நிர்வாகிககள் ஜெயக்குமார், கார்த்திகேயன், கீர்த்திவாசன், சிவராஜ் பிரான்சிஸ், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #BJP
    Next Story
    ×