என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கும்பல் சிக்கியது
கொண்டலாம்பட்டி:
சேலம் மாவட்டம் மேட்டூர், கருப்பு ரெட்டியூர் அருகே உள்ள கும்புரான் காடு பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 34). லாரி டிரைவர். இவர் நேற்று சங்ககிரி அருகே கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னக்கவுண்டனூர் என்ற இடத்தில் லாரியை ஓட்டி வந்து நிறுத்தினார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஹரிகரனை மிரட்டி பணத்தை பறித்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி, திருப்பூர் மாவட்டம் கனகையம்பாளையம், கிழக்கு தெருவை சேர்ந்த செல்வகுமார் என்கிற மதன் (30), திருப்பூர் விக்னேஸ்வரர் நகரை சேர்ந்த பூபதி (23), திருச்செங்கோடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த குப்புசாமி என்கிற சதாசிவம் (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் மதன் மீது தாராபுரம், பழனி டவுன், சூலூர் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது.
இதுபோல் சங்ககிரி, கலியனூர் பிரிவு பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் முருகேசன் (48)கீழே இறங்கியபோது அவரை 6 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றது. இந்த 6 பேர் கும்பலை சங்ககிரி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்