என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதியதில் மாணவன் பலி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பாண்டுரங்கன் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் அபிஷேக்(18). இவரது நண்பர் பாலாஜி(18). இருவரும் பிளஸ் 2 படித்து வந்தனர்.
இவர்கள் 2பேரூம் பைக்கில் கிருஷ்ணகிரிக்கு வந்துவிட்டு, பின்னர் ராயக்கோட்டைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது சிக்கபூவத்தி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மினி லாரி, இவர்கள் சென்ற பைக் மீது மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில், பைக்யை ஓட்டி சென்ற அபிஷேக் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். படுகாயம் அடைந்த பாலாஜியை அங்கிருந்தவர்கள் உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்