search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதியதில் மாணவன் பலி
    X

    கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதியதில் மாணவன் பலி

    கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதியதில் மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பாண்டுரங்கன் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் அபிஷேக்(18). இவரது நண்பர் பாலாஜி(18). இருவரும் பிளஸ் 2 படித்து வந்தனர்.

    இவர்கள் 2பேரூம் பைக்கில் கிருஷ்ணகிரிக்கு வந்துவிட்டு, பின்னர் ராயக்கோட்டைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது சிக்கபூவத்தி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மினி லாரி, இவர்கள் சென்ற பைக் மீது மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில், பைக்யை ஓட்டி சென்ற அபிஷேக் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். படுகாயம் அடைந்த பாலாஜியை அங்கிருந்தவர்கள் உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×