என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்14 Sep 2018 11:27 AM GMT (Updated: 14 Sep 2018 11:27 AM GMT)
மூலகுளத்தில் வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை மூலகுளம் மோதிலால் நகரை சேர்ந்தவர் ஆண்டனி ஜோசப். இவர் தனியார் பள்ளி ஒன்றில் கிளாக்காக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் ஜான்சி (வயது17). இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததையடுத்து அதே பகுதியில் பேன்சி கடை நடத்தி வரும் அவரது பாட்டிக்கு ஜான்சி உதவியாக இருந்து வந்தார். அதேவேளையில் ஜான்சி வீட்டு வேலை ஏதுவும் செய்வதில்லை என கூறப்படுகிறது.
இதனை ஜான்சியின் தாய் பாக்யாபேட்ரிக் கண்டித்து வந்தார். அதுபோல நேற்று முன்தினம் மாலை வீட்டுவேலை எதுவும் செய்யாமல் ஜான்சி தூங்கினார். இதனை பாக்யா பேட்ரிக் கண்டித்து இதுபோல் படிக்காமல் தூங்கியதால்தான் தேர்வில் தோல்வி அடைந்ததாக ஜான்சியை திட்டினார்.
இதனால் மனமுடைந்த ஜான்சி தற்கொலை கொள்ள முடிவு செய்தார். நேற்று காலை ஜான்சி பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் ஜான்சி சாப்பிட வராததால் சந்தேகம் அடைந்த பாக்யாபேட்ரிக் வந்து பார்த்த போது மின்விசிறி கொக்கியில் ஜான்சி துப்பட்டாவால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
புதுவை மூலகுளம் மோதிலால் நகரை சேர்ந்தவர் ஆண்டனி ஜோசப். இவர் தனியார் பள்ளி ஒன்றில் கிளாக்காக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் ஜான்சி (வயது17). இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததையடுத்து அதே பகுதியில் பேன்சி கடை நடத்தி வரும் அவரது பாட்டிக்கு ஜான்சி உதவியாக இருந்து வந்தார். அதேவேளையில் ஜான்சி வீட்டு வேலை ஏதுவும் செய்வதில்லை என கூறப்படுகிறது.
இதனை ஜான்சியின் தாய் பாக்யாபேட்ரிக் கண்டித்து வந்தார். அதுபோல நேற்று முன்தினம் மாலை வீட்டுவேலை எதுவும் செய்யாமல் ஜான்சி தூங்கினார். இதனை பாக்யா பேட்ரிக் கண்டித்து இதுபோல் படிக்காமல் தூங்கியதால்தான் தேர்வில் தோல்வி அடைந்ததாக ஜான்சியை திட்டினார்.
இதனால் மனமுடைந்த ஜான்சி தற்கொலை கொள்ள முடிவு செய்தார். நேற்று காலை ஜான்சி பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் ஜான்சி சாப்பிட வராததால் சந்தேகம் அடைந்த பாக்யாபேட்ரிக் வந்து பார்த்த போது மின்விசிறி கொக்கியில் ஜான்சி துப்பட்டாவால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X