search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து கோவையில் காங்கிரசார் பேரணி- ஆர்ப்பாட்டம்
    X

    ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து கோவையில் காங்கிரசார் பேரணி- ஆர்ப்பாட்டம்

    மத்திய பாரதீய ஜனதா அரசின் ரபேல் போர் விமான பேர ஊழலை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கோவையில் காங்கிரசார் பேரணி- ஆர்ப்பாட்டம் நடத்தினர். #congressdemonstration

    கோவை:

    மத்திய பாரதீய ஜனதா அரசின் ரபேல் போர் விமான பேர ஊழலை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். கோவை மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் வரவேற்று பேசினார்.

    கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், மாநில துணை தலைவர்கள் எம்.என். கந்தசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான சஞ்சய்தத் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    இதில் மாநில பொது செயலாளர்கள் தணிகா சலம், வீனஸ் மணி, முன்னாள் மேயர் வெங்கடாசலம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் எஸ். கவிதா, சரவணக்குமார், மாநில துணை தலைவர் என்ஜினீயர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் மகேஷ்குமார், கணபதி சிவகுமார், சவுந்திரகுமார், ஐ.என்.டி.யூ.சி கோவை செல்வம்,இளைஞர் காங்கிரஸ் குமரேசன், மகிளா காங்கிரஸ் உமா மகேஸ்வரி, காயத்ரி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஹரிஹர சுதன், எச்.எம்.எஸ். ராஜாமணி, வக்கீல் கருப்பசாமி, எம்.எஸ். பார்த்தீபன், காட்டூர் சோமு, சின்னையன், ஹனிபா, ராயல் மணிகண்டன், வக்கீல் கிருஷ்ண குமார், ஜெயப்பிரகாஷ், பிரபாகரன், துளசிராஜ், ராம்கி, சாய் சாதிக், இருகூர் சுப்பிர மணியன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், சின்னராஜ், விஜயகுமார், ஆகாஷ், தங்கதுரை, மயில் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    முன்னதாக கோவை அண்ணா சிலை அருகில் இருந்து தெற்கு தாசில்தார் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர். #congressdemonstration

    Next Story
    ×