search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூரில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    அரியலூரில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவசங்கர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் விழுப்புரத்தில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் பெருந்திரளாக கலந்துகொள்வது எனவும், பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது,

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பெருநற்கிள்ளி, மாவட்ட துணைச்செயலாளர்கள் தனபால், கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, செயற்குழு உறுப்பினர் தில்லைகாந்தி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதிவேல், ஞானமூர்த்தி, தனசேகர், செல்வராஜ், தர்மதுரை, நகர செயலாளர்கள் அரியலூர் முருகேசன், ஜெயங்கொண்டம் கருணாநிதி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×