என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவெறும்பூரில் பெல் ஊழியர் தற்கொலை
திருவெறும்பூர்:
திருச்சி திருவெறும்பூர் எழில் நகர் முல்லை தெருவை சேர்ந்தவர் சிவதேவன். பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சாந்தி (வயது28). திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆனதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவரது மனைவி சாந்தி விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்டார்.
இதற்கான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில்சாந்தி, சிவதேவன் தனக்கு ஜீவானாம்சமாக ரூ.20 ஆயிரம் தர வேண்டும் கேட்டார். இதனை சிவதேவன் எதிர்த்தார். மேலும் திருமணமாகி தன்னுடன் ஒரு வருடம் தான் வாழ்ந்துள்ளார். அதனால் அவருக்கு ஜீவனாம்சம் வழங்கமாட்டேன் என கூறி வந்தார்.
இதற்கிடையே இந்த வழக்கு கரூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதி ரூ.20 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த சிவதேவன் நேற்று நள்ளிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருவெறும்பூர் போலீசார் விரைந்து சென்று சிவதேவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்