search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணி அருகே பஸ் மோதி வாலிபர் பலி
    X

    ஆரணி அருகே பஸ் மோதி வாலிபர் பலி

    ஆரணி அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி அருகே உள்ள மேல்நகரை சேர்ந்தவர் அரங்கநாதன் மகன் மணிபாலன் (வயது 23). இவர் ஆற்காட்டில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார்.

    மணிபாலன் நேற்று இரவு ஆரணியில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேலூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணிபாலன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×