search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஜெயிலில் கைதிகளுக்கு சலுகைகள் ஏன்?- இளங்கோவன் பரபரப்பு பேட்டி
    X

    புழல் ஜெயிலில் கைதிகளுக்கு சலுகைகள் ஏன்?- இளங்கோவன் பரபரப்பு பேட்டி

    முதல்வரும், துணை முதல்வரும் விரைவில் சிறைக்கு செல்ல இருப்பதால் புழல் ஜெயிலில் கைதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Congress #Elangovan
    ஈரோடு:

    ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமும், பேரணியும் இன்று நடந்தது.

    அதன்படி ஈரோடு காங்கிரஸ் சார்பில் சம்பத் நகர்-நசியனூர் ரோடு பிரிவில் பேரணி தொடங்கி கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. முன்னதாக ஆர்ப்பாட்டம் செய்தனர். பிறகு கலெக்டர் கதிரவனை சந்தித்து மனு கொடுத்தார்.

    இதில் பங்கேற்ற மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ரபேல் போர் விமானம் காங்கிரஸ் ஆட்சியின் போது வெறும் 520 கோடி ரூபாயில் வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த போர் விமானங்களை 1500 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 1100 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது. அந்த பணத்தை லஞ்சமாக பெற வாய்ப்புள்ளது.

    இது குறித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த போர் விமானங்கள் விலை பற்றி கேட்டால் மழுப்பி வருகிறார். ராணுவம் ரகசியம். இதை வெளியே சொல்ல முடியாது என்கிறார்.

    விலையை கூறுவதில் தவறு ஏதும் இல்லை. என்ன ஆயுதம்? என்ன குண்டு தயாரிக்கிறார்கள்? என்று கேட்டால்தான் ராணுவ ரகசியம்.

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை பொறுத்த வரை சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா ஏற்கனவே அவர்களை மன்னித்து விட்டனர். இனிமேல் தமிழக அரசு தான் அதில் முடிவு எடுக்க வேண்டும்.


    புழல் சிறையில் கைதிகளுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுத்தது போல படங்கள் வெளியானது. அது ஏன் என்றால்? மிக விரைவில் முதல்வரும், துணை முதல்வரும் சிறைக்கு செல்ல இருப்பதால் இது போன்ற சலுகை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    மின் மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது என்று அமைச்சர் தங்கமணி சொல்லி வருகிறார். நேற்று கூட ஈரோட்டில் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கிராமப்புறங்களில் 4 முதல் 6 மணி நேரம் மின் தடை ஏற்பட்டு வருகிறது.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார். #Congress #Elangovan #EdappadiPalaniswami #OPanneerSelvam #PuzhalJail
    Next Story
    ×