search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுத்த ஆண்டு முதல் அரசுபள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச ஷூ வழங்கப்படும்
    X

    அடுத்த ஆண்டு முதல் அரசுபள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச ஷூ வழங்கப்படும்

    அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் விலையில்லா செருப்புகளுக்கு பதில் ஷூ வழங்க அரசுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. #GovtSchools #Shoe #MinisterSengottaiyan
    சென்னை:

    தனியார் பள்ளி மாணவ- மாணவிகளை போல் அரசுப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    சீருடையில் மாற்றம் கொண்டு வந்தாலும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகளை போல் ஷூ அணியாமல் செருப்புகள் அணிந்துதான் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர்.

    இந்த குறையை நிவர்த்தி செய்ய அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் விலையில்லா செருப்புகளுக்கு பதில் ஷூ வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கடந்தவாரம் செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் தெரிவித்திருந்தார்.

    இதை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளில் பள்ளிக் கல்வித்துறை வேகமாக ஈடுபட்டு வருகிறது.

    கடந்த 2017-18-ம் ஆண்டில் 1 முதல் 10 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 60 லட்சம் விலையில்லா செருப்புகள் வழங்கப்பட்டுள்ளதால் அதே அளவுக்கு அடுத்த ஆண்டு ‘ஷூ’ வழங்க அரசுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

    இதற்காக முன்னணி நிறுவனங்களிடம் இருந்து விலைப் புள்ளிகள் பெறப்பட்டு தகுதியான நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட உள்ளது.


    ஒவ்வொரு மாணவ- மாணவிக்கும் கருப்பு கலர் மற்றும் வெள்ளை கலரில் 2 ஷூக்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    இதுபற்றி அரசு உயர் அதிகாரி கூறுகையில், மாணவ-மாணவிகளின் கால்களுக்கு ஏற்றார்போல் பல்வேறு அளவுகளில் ஷூ தயாரிக்க டெண்டரில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். #GovtSchools  #Shoe #MinisterSengottaiyan
    Next Story
    ×