என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணம் தள்ளிப்போனதால் காதல்ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்14 Sep 2018 3:31 AM GMT (Updated: 14 Sep 2018 3:31 AM GMT)
திருமணம் தள்ளிப்போனதால் காதல்ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது திருப்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருப்பூர்:
மதுரை உசிலம்பட்டி கட்டத்தேவன் பட்டியை சேர்ந்தவர் தவமணி. இவர் குடும்பத்துடன் திருப்பூர் செரங்காடு பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யா (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய உறவினரான மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டியை சேர்ந்த அருண்பாண்டி (26) திருப்பூர் நல்லூர் அருகே உள்ள பொன்முத்து நகர் 1-வது வீதியில் உள்ள அவருடைய அக்கா வீட்டில் தங்கி ஒர்க்ஷாப்பில் வேலைபார்த்து வந்தார்.
இவர்கள் 2 பேரும் உறவினர்கள் என்பதாலும், அடிக்கடி சந்தித்துக்கொண்டதாலும் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இவர்களின் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் அருண்பாண்டியின் தந்தை சேதுபாண்டி திடீரென இறந்து விட்டார். இதனால் இவர்களின் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. திருமணம் தள்ளி வைக்கப்பட்டதால் காதல்ஜோடி மனவேதனை அடைந்தனர்.
இந்தநிலையில் அருண்பாண்டி தங்கி இருந்த வீட்டில் திவ்யாவும், அருண்பாண்டியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து திருப்பூர் ஊரக போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் தள்ளிப்போனதால் இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
மதுரை உசிலம்பட்டி கட்டத்தேவன் பட்டியை சேர்ந்தவர் தவமணி. இவர் குடும்பத்துடன் திருப்பூர் செரங்காடு பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யா (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய உறவினரான மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டியை சேர்ந்த அருண்பாண்டி (26) திருப்பூர் நல்லூர் அருகே உள்ள பொன்முத்து நகர் 1-வது வீதியில் உள்ள அவருடைய அக்கா வீட்டில் தங்கி ஒர்க்ஷாப்பில் வேலைபார்த்து வந்தார்.
இவர்கள் 2 பேரும் உறவினர்கள் என்பதாலும், அடிக்கடி சந்தித்துக்கொண்டதாலும் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இவர்களின் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் அருண்பாண்டியின் தந்தை சேதுபாண்டி திடீரென இறந்து விட்டார். இதனால் இவர்களின் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. திருமணம் தள்ளி வைக்கப்பட்டதால் காதல்ஜோடி மனவேதனை அடைந்தனர்.
இந்தநிலையில் அருண்பாண்டி தங்கி இருந்த வீட்டில் திவ்யாவும், அருண்பாண்டியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து திருப்பூர் ஊரக போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் தள்ளிப்போனதால் இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X