என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குயிலம் பகுதியில் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுது - குடிநீருக்காக சுற்றித்திரியும் கிராம மக்கள்
Byமாலை மலர்13 Sep 2018 4:39 PM GMT (Updated: 13 Sep 2018 4:39 PM GMT)
குயிலம் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக சுற்றித்திரிந்து வருகின்றனர்.
வாணாபுரம்:
வாணாபுரம் அருகே உள்ள குயிலம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு பிறகு பொது மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று குடங்களில் குடிநீர் எடுத்து வருகின்றனர். மேலும் விவசாய நிலங்களுக்கு சென்றும் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரை சீரமைத்து சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணாபுரம் அருகே உள்ள குயிலம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு பிறகு பொது மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று குடங்களில் குடிநீர் எடுத்து வருகின்றனர். மேலும் விவசாய நிலங்களுக்கு சென்றும் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரை சீரமைத்து சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X