search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே ஏரியில் மூழ்கி குழந்தை பலி
    X

    அரியலூர் அருகே ஏரியில் மூழ்கி குழந்தை பலி

    அரியலூர் அருகே ஏரியில் மூழ்கி 4 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. சாமி கும்பிட சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
    அரியலூர்:

    கேரளமாநிலம் திருச்சூர் அருகே  உள்ள கோலிமரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 38). இவர் குடும்பத்துடன் அரியலூர்  மாவட்டம் தா.பழூர் அடுத்த உதயநத்தம் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வம் சென்னிஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டு கோவில் அருகே உள்ள வெவ்வால் ஏரியில் குளிக்க சென்றார். பின்னர் ஏரியில் குடும்பத்துடன் குளித்தார். 

    அப்போது அய்யப்பனின் மகன் விமல் (வயது 4) நீரில் முழ்கினார். அவரை குடும்பத்தினர் தேடி பார்த்தனர். அதற்குள் விமல் தண்ணீரில் மூழ்கி பலியானார். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜெயங் கொண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×