search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவதானப்பட்டியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
    X

    தேவதானப்பட்டியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

    தேவதானப்பட்டியில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தேவதானப்பட்டி:

    வத்தலக்குண்டு அருகே உள்ள பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா (வயது 21). இவரும் தேவதானப்பட்டி கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த காசிநாதன் என்பவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    காசிநாதன் தேனியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. லாவண்யாவுக்கும் காசிநாதன் குடும்பத்தினருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் மனமுடைந்த லாவண்யா நேற்று இரவு தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×