என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பூந்தமல்லி கிளை சிறையில் கைதியிடம் செல்போன் சிக்கியது
பூந்தமல்லி:
பூந்தமல்லி கரையான் சாவடியில் உள்ள கிளை சிறையில் 18 கைதிகள் உள்ளனர். அம்பத்தூர் இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் உள்ளனர். சிறைத்துறை அதிகாரி கோதண்டராமன் நேற்று சிறையில் திடீர் சோதனை நடத்தினார்.
18 கைதிகள் தங்கி இருந்த அறையில் நடத்திய சோதனையில் சூளைமேட்டை சேர்ந்த விஜய்தண்டபாணி (45) என்ற கைதியிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, பேட்டரி போன்றவற்றை அவர் கைப்பற்றினார். சிறைக்குள் செல்போன் எப்படி வந்தது. அவருக்கு சலுகை காட்டியது யார் என்று விசாரணை நடத்தப்படுகிறது.
மேலும் விஜய் தண்டபாணி பல்வேறு மோசடி வழக்கில் கைதாகி உள்ளார். அவருக்கு வெளி மாநிலங்களில் இருந்து தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. அதனால் அவரது சிம்கார்டில் இருந்து யார் யாருக்கு பேசியுள்ளார் என்ற விவரங்களை போலீசார் சேகரிக்கின்றனர்.
பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்