என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவியுடன் தகராறு: கால்டாக்சி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்12 Sep 2018 7:09 PM GMT (Updated: 12 Sep 2018 7:09 PM GMT)
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த கால் டாக்சி டிரைவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்குன்றம்:
சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் திலகர் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை(வயது 27). கால் டாக்சி டிரைவர். இவருடைய மனைவி சித்ரா(22). இவர்களுக்கு 4 வயதில் தினேஷ் கார்த்திக் என்ற மகன் உள்ளார்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சித்ரா, அடிக்கடி தனது கணவருடன் கோபித்துக்கொண்டு அதே லட்சுமிபுரம் நேரு தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் தாய் வீட்டில் இருந்து மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ஏழுமலை, தனது வீட்டில் மின்விசிறியில் மனைவியின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த புழல் போலீசார், தற்கொலை செய்து கொண்ட ஏழுமலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் திலகர் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை(வயது 27). கால் டாக்சி டிரைவர். இவருடைய மனைவி சித்ரா(22). இவர்களுக்கு 4 வயதில் தினேஷ் கார்த்திக் என்ற மகன் உள்ளார்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சித்ரா, அடிக்கடி தனது கணவருடன் கோபித்துக்கொண்டு அதே லட்சுமிபுரம் நேரு தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் தாய் வீட்டில் இருந்து மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ஏழுமலை, தனது வீட்டில் மின்விசிறியில் மனைவியின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த புழல் போலீசார், தற்கொலை செய்து கொண்ட ஏழுமலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X