search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
    X

    கோவையில் கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

    கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    சூலூர்:

    கோவையை அடுத்த சூலூர் சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் சதீஸ்(வயது 18). இவர், தென்னம்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல வேலைக்கு சென்ற சதீஸ், நேற்று முன்தினம் இரவு சாப்பிடுவதற்காக அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார். பின்னர் அங்கு சாப்பிட்டு விட்டு தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் திடீரென்று சதீஸ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் விரைந்து வந்து சதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×