search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்- அதிமுக மாவட்ட செயலாளர் தகவல்
    X

    தூத்துக்குடியில் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்- அதிமுக மாவட்ட செயலாளர் தகவல்

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வருகிற 15ந் தேதிமாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். திடலில் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வருகிற 15ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு, தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். திடலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, தலைமை கழக பேச்சாளர் சுப்பையா பாண்டியன், நெல்லை எல்.கபாலி மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

    வருகிற 16-ந்தேதி காயல்பட்டினத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் நெல்லை சடகோபன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். 17-ந்தேதி கோவில்பட்டியில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன், தலைமை கழக பேச்சாளர் ராமசுப்பிரமணியன், சிவாஜி சின்னப்பன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    எனவே இந்த கூட்டங்களுக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய பகுதி நகர பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×