search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரூர் பகுதியில் பூக்களின் விலை உயர்வு
    X

    அரூர் பகுதியில் பூக்களின் விலை உயர்வு

    விநாயகர் சதுர்த்தி - முகூர்த்த தினத்தையொட்டி அரூர் பகுதியில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
    அரூர்:

    தருமபுரி மாவட்டத்தில் அரூர் பகுதியில் கடத்தூர், பொம்மிடி, தீர்த்த மலை, கீரைப்பட்டி, மோட்டாங்குறிச்சி, புட்டி ரெட்டிப்பட்டி பகுதிகளில் மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பரளவில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கிருந்து பெங்களூர், சேலம், சென்னை ஆகிய பகுதிகளுக்கு பூ ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

    விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள் என்பதால் அனைத்து பூக்களின் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது செண்டுமல்லி கிலோ ரூ. 30, சாமந்தி ரூ. 140 விறபனை செய்யப்படுகிறது. 

    தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்தி நாட்களில் விலை உயர்ந்து சாமந்தி கிலோ ரூ. 200க்கு மேலும், செண்டுமல்லி ரூ. 60 வரையும் விலைபோகும் என பூக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×