search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளித்தலை பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள்-மாணவர்கள் அவதி
    X

    குளித்தலை பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள்-மாணவர்கள் அவதி

    குளித்தலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    முசிறி:

    கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக பகலில் 2 மணி நேரமும், இரவு, நள்ளிரவு நேரங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாகவும், அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. இதனால்  காலாண்டு தேர்வுக்கு பள்ளி மாணவ- மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

    நள்ளிரவு 1 மணிக்குமேல் மின்தடை ஏற்படுவதால் வயது முதிர்ந்தோர், உடல்நலம் குன்றியோர் மிகுந்த பாதிப்படைகின்றனர். இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் மின்சாரத்தை தடைச்செய்யகூடாது. மீறி தடை செய்தால் போராட்டத்தில் இறங்குவோம் என  தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×