search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருப்புக்கோட்டை பகுதியில் 15-ந் தேதி மின் நிறுத்தம்
    X

    அருப்புக்கோட்டை பகுதியில் 15-ந் தேதி மின் நிறுத்தம்

    அருப்புக்கோட்டை பகுதியில் வருகிற 15-ந் தேதி மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை பகுதியில் வருகிற 15-ந் தேதி மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    இது குறித்து அருப்புக் கோட்டை மின் வினியோக செயற்பொறியாளர் முத்தரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    அருப்புக்கோட்டையில் துணை மின் நிலையத்தில் வருகிற 15-ந் தேதி (சனிக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் அருப்புக்கோட்டை, பெரிய புளியம்பட்டி, பந்தல்குடி, பாலையம்பட்டி, கல்குறிச்சி, ஆத்திப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி களில் மின் வினியோகம் இருக்காது.

    இதே போல் தமிழ்பாடி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் தமிழ்பாடி, இலுப்பையூர், திருச்சுழி, பனையூர், ஆணைக் குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    அருப்புக்கோட்டை முத்து ராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி, ராம லிங்கா மில் ஏ.யூனிட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி களில் மின் வினியோகம் இருக்காது.

    இதே போல் 24-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலாயுதபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் பரமேஸ்வரி மில், வெம்பூர் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

    Next Story
    ×